அடை மழை கால
புழுக்கங்கள் போல்
விடை தெரியாத
உன் மௌனங்கள்..!!
உரக்க எழுதினாலும்
இரங்கவில்லை இதயம்..
இரவு முழுக்க
ஈரம் எங்கும்…!!
பரிமாறல்களின்றி..
பார்வைகளின்றி..
பாசம் பேச
வேற்று மொழியை
விரும்பவில்லை நான்..!!
உன் கரம் பற்றி
விழி ஊன்றி
ஒரேயொரு முறை
நாம் நட்பு சமைப்போம்..!!
பகிர்தல் நட்பிற்கழகாம்..
பகிர ஏதுமில்லையெனினும்..
பகிராமலே பாத்திரம் நிரம்புவது
நட்பில் மட்டுமே சாத்தியம்..!!
அன்பின் ஊற்றை
அந்த நாள் நினைவுகளை
அழுந்த வாசிக்கையில்
நிரம்பி விடும் கண்ணீருக்கேனும்
பதில் சொல்வாயா நீ…??!!
--
பூமகள்.
பூமகள்.
3 comments:
nice one
அழகு கவிதை வாழ்த்துக்கள்..
ம்ம்ம்ம், காதல்...
Post a Comment